இணையடிச் சிறப்புக் கூறியது 122. | ஒருமலை மத்துவலித்து உலவுக யிற்றினுமற்று | | உலகுப ரித்தபணத்து உரகவ டத்தினும்அப் பருமணி முத்துநிரைத்து உடுமணி தைத்தஇணைப் பரிபுரம் வைத்ததளிர்ப் பதயுக ளத்தினளே. | (பொ-நி.) கயிற்றினும்வடத்தினும் முத்து நிரைத்து மணிதைத்த பரிபுரம் வைத்த பதத்தினள்; (எ-று.) (வி-ம்.) மலை-மந்தரமலை. மத்து - தயிர்கடைமத்து. வலித்து- மேலே சுற்றி. கயிறு-கயிறாயிருந்த வாசுகி. பரித்தல்-தாங்குதல். பணம்- படம். உரகம்-(ஆதிசேடனாகிய) பாம்பு. அ -அழகிய. உடுமணி(யாகிய)பருமணி முத்து நிரைத்துத் தைத்த என இயைக்க. மணிமுத்து - அழகிய முத்து. உடுமணி -வானமீன்கள். இணை- இரண்டு. பரிபுரம் - சிலம்பு. உகளம்- இணை. 'உகள பதத்தின்' என விகுதி பிரித்துக் கூட்டுக. (2) |