கூத்தின் சிறப்புக் கூறியது

123.அரவொடு திக்கயமப் பொழுதுப ரித்தவிடத்து
      அடியிட உட்குழிவுற்று அசைவுறும் அப்பொழுதில்
தரணித ரித்ததெனப் பரணிப ரித்தபுகழ்ச்
     சயதர னைப்பரவிச் சதிகொள்ந டத்தினளே.

     (பொ-நி.)  திக்கயம்   பரித்த   இடத்து,   அடி  இட  அசைவுறும்
அப்பொழுதில்  (சயதரனால்)    தரணி   தரித்ததென,  சயதரனைப்  பரவி,
சதிகொள்  நடத்தினள்; (எ-று.)

     (வி-ம்.) அரவு - ஆதிசேடன். திக்கயம் - திசையானை. அப்பொழுது
-அந்தக்காலம். (குலோத்துங்கன்  தாங்குதற்கு  முன்)  பரித்தல் - தாங்குதல்.
அடிஇட-கூத்தியற்ற; தன் கால்களை  வைக்க.  உள்குழிவு  உற்று - உள்ளே
பள்ளமாகி.  தரணி - உலகம்.  தரித்தது - குலோத்துங்கன்  தாங்கியமையின்
நிலைபெற்றது.  பரணிபரித்த புகழ்-பரணிபாடற்கேற்ற புகழையுடைய. சயதரன்
-குலோத்துங்கன்; வெற்றி பூண்டவன் என்பது பொருள்.  பரவி-புகழ்ந்து. சதி
-தாள அறுப்பு.                                               (3)