தனத்தின் சிறப்புக் கூறியது

124.தணிதவ ளப்பிறையைச் சடைமிசை வைத்தவிடைத்
       தலைவர்வ னத்தினிடைத் தனிநுகர் தற்குநினைத்து
அணிதவ ளப்பொடியிட்டு அடையவி லச்சினையிட்டு
     அமுதமி ருத்தியசெப் பனையத னத்தினளே.

     (பொ-நி.) தலைவர் நுகர்தற்கு நினைத்து, பொடி இட்டு,  இலச்சினை
இட்டு, அமுதம் இருத்திய செப்பு அனைய தனத்தினள்; (எ-று.)

     
(வி-ம்.) தணி-வெம்மையைக்  குறைக்கின்ற;  தண்ணிய  எனற்பாலது
தணி என நின்றது, குளிர்ந்த என்றவாறு, தவளம், வெண்மை.  விடை-எருது.
தலைவர் - சிவன்.   வனம் - காடு.  தனி  நுகர்தல் - தாமே கொள்ளுதல்.
தவளப்பொடி  -   வெண்ணீறு.  இலச்சினை  -  முத்திரை.   வெண்ணீறே
இலச்சினையாம்   என்க.  அரும்பொருளாதற்  கேற்ப,  முத்திரை  இட்டுப்
பாதுகாக்கப்பட்டதென்றவாறு. செப்பு - செப்புக்கிண்ணம்.             (4)