உடைச் சிறப்புக் கூறியது 125. | பரிவக லத்தழுவிப் புணர்கல விக்குருகிப் | | படர்சடை முக்கணுடைப் பரமர்கொ டுத்தகளிற்று உரிமிசை யக்கரியிற் குடரொடு கட்செவியிட்டு ஒருபுரி இட்டுஇறுகப் புனையுமு டுக்கையளே. |
(பொ-நி.) பரமர் கலவிக்கு உருகிக்கொடுத்த களிற்று உரிமிசை, ஒருபுரி இட்டு இறுகப் புனையும் உடுக்கையள்; (எ-று.) (வி-ம்.) பரிவு - காமத்துன்பம். கலவி - ஒன்றுபட்ட இன்பம். படர் -விரித்த. பரமர் - சிவனார். உரி - தோல். கரி - யானை. குடர் - குடல்; ஈற்றுப்போலி, கட்செவி-பாம்பு. புரி-முறுக்கிய கயிறு. உடுக்கை - அரைக்கச்சு. (5) |