கையின் சிறப்புக் கூறியது 128. | அரியுமி டற்றலையிட்டு அலைகுரு திக்கெதிர்வைத்து | | அறவும டுத்தசிவப் பதனைமு ழுத்திசையின் கரிகர டத்தொளையின் கலுழியி டைக்கழுவிக் கருமைப டைத்தசுடர்க் கரகம லத்தினளே. |
(பொ-நி.) குருதிக்கு எதிர்வைத்து மடுத்த, சிவப்பதனைக் கலுழி இடைக்கழுவிக் கருமை படைத்த கர கமலத்தினள். (எ-று.) (வி-ம்.) அரியும்-அறுக்கும். மிடறு-கழுத்து. அலையிட்டு-அலையை உண்டாக்கி, அலை-நான்குபுறமும் பரக்கின்ற. குருதி-செந்நீர் .எதிர்வைத்தல் -மொள்ளுதல். மடுத்தல்-பருகல். கரி-யானை. கலுழி-வெள்ளம். கரகமலம் ்-கைத்தாமரை. (8) |