உதட்டின் சிறப்புக் கூறியது 129. | சிமையவ ரைக்கனகத் திரளுரு கப்பரவைத் | | திரைசுவ றிப்புகையத் திசைசுடு மப்பொழுதத்து இமையவ ரைத்தகைதற்கு இருளுமி டற்றிறைவதற்கு இனியத ரத்தமுதக் கனியத ரத்தினளே |
(பொ-நி.) திரள் உருக, திரை புகைய, திசை சுடும் அப்பொழுது, இருளும் மிடற்று இறைவற்கு அமுதக்கனி அதரத்தினள்; (எ-று.) (வி-ம்.) சிமையக்கனவரைத்திரள் என இயைக்க. சிமையம்-கொடுமுடி. கனகவரை-மேருமலை. திரள் - கூட்டம். பரவை - கடல். திரை - அலை. அப்பொழுது- ஆலகாலவிடம் எழுந்தபொழுது. இமயவர்-தேவர். தகைதல் -(விடம்பற்றாமல்)அடக்கல், மிடறு-கழுத்து, இறைவன்-சிவன், தரம்-தன்மை. கனி-கொவ்வைக்கனி, அதரம்-உதடு. (9) |