வாயின் சிறப்புக் கூறியது 130. | உருகுத லைத்தொ டையற்கு வமைய றச்சுழல்வுற்று | | உலவுவி ழிக்கடைபட்டு உடல்பகை யற்றொழியத் திருகுரவைக் கிளவிச் சிறுகுத லைப்பவளச் சிறுமுறு வற்றரளத் திருவத னத்தினளே. |
(பொ-நி.) விழிக்கடைபட்டு, உருகு தலைத் தொடையற்கு உடல்பகை அற்று ஒழிய, குரவை, குதலை, முறுவல் தரளத் திருவதனத்தினள்; (எ-று.)
(வி-ம்.) உருகு - ஆசையால் உருகுகின்ற தலைதொடையன் - தலைமாலையணிந்த சிவன். சுழல்வுற்று- சுழன்று. விழிக்கடை -கடைக்கண் பார்வை . உடல்பகை - காமநோய். குரவை- நாவை உருட்டிச் செய்யும் மகிழ்ச்சியொலி. பவளச் சிறுமுறுவல் -பவளம் போன்ற உதட்டில் தோன்றும புன்முறுவல். தரளம் - பற்களாகிய முத்துக்கள். வதனம்-முகம். விழிக்கடை எழுப்பிய காமநோய் ஒழியுமாறு செய்தன குரவை, குதலை, முறுவல் என இவை என்க. (10) |