திருமுகச் சிறப்புக் கூறியது 131. | அருமறை யொத்தகுலத்து,அருணெறியொத்த குணத்து | | அபயனு தித்தகுலத்து உபயகு லத்துமுதல் திருமதி யொக்குமெனத் தினகர னொக்குமெனத் திகழ்வத னத்தினிடைத் திலகவ னப்பினளே. |
(பொ-நி.) அபயன் உதித்த உபயகுலத்து முத(லாகிய)மதி, தினகரன் ஒக்குமென, வதனத்திடை, திலக வனப்பினள். (எ-று.)
(வி-ம்.) குலத்து - குல ஒழுக்கத்தினையுடைய. குணத்து குணத்தினையுடைய. குலத்து-மேன்மையான. உபய குலம்-தந்தைதாயர் குலம். முதல் - முதல்வனாகிய. மதி - திங்கள். தினகரன் - ஞாயிறு. வதனம்-முகம். திலகம் - பொட்டு. வனப்பு-அழகு. (11) |