நாமகள் வணக்கம் 13. | பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும் | | புயத்திருப்ப மிகவுயரத் திருப்பள் என்று நாமாதும் கலைமாதும் என்னச் சென்னி நாவகத்துள் இருப்பாளை நவிலு வாமே. | 14. | எண்மடங்கு புகழ்மடந்தை நல்லன் எங்கோன் | | யானவன்பால் இருப்பதுநன் றென்பாள்போல மண்மடந்தை தன்சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்தபிரான் வளவர்பிரான் வாழ்க வென்றே. | (பொ-நி) புகழ்மடந்தை "நல்லன்; இருப்பது நன்று" என்பாள்போல, மண்மடந்தை, வெள்ளைசாத்தி மகிழ்ந்தபிரான் வாழ்க என்று, பூமாதும் சயமாதும் புயத்திருப்ப, உயரத்திருப்பளென்று, நாவகத்துள் இருப்பாளை, நவிலுவோம்; (எ-று.) (வி-ம்.) நான்முகன் நாவினும் புலவர் நாவினும் உறைதலாற் கலைமகள் நாமகளெனப்பட்டாள். பூமாது-மண்மகள். சயமாது -வெற்றிமகள். என்று இருப்பாளை, என்ன இருப்பாளை எனத் தனித்தனி இயைக்க. சென்னி-குலோத்துங்கன், நவிலுவோம்-துதிப்போம். எண்மடங்கு-மற்றை யரசர்களினும் எட்டு மடங்கு. மண்மடந்தைக்குச் சாத்தினான் என்க. மண்மடந்தை - நிலமாகிய மகள். சீர்த்தி-மிகுபுகழ். வெள்ளை-வெள்ளை நிறத் தூய ஆடை; ஈண்டு ஆகுபெயர். ஈண்டும் அபயன் புகழ் மேம்பாடு குறிக்கப்பட்டது. (13, 14) |