உடல், மயிர், மூக்கு, செவி இயல்பு கூறியது

140. பாந்தள் நால்வன போலுமு டல்மயிர்
     பாசி பட்டப ழந்தொளை மூக்கின 
ஆந்தை பாந்தியி ருப்பத்து ரிஞ்சில்புக்கு
   அங்கு மிங்குமு லாவுசெ வியன.

     (பொ-நி.) பாந்தள் போலும் மயிர்; பழந்தொளை மூக்கின; துரிஞ்சில் உலாவு செவியன; (எ-று.)

     (வி-ம்.) பாந்தள் -பாம்பு. நாறுதல்-தொங்குதல். பழம்பாசி-நாட்பட்ட
அழுக்கு. பட்ட-பொருத்திய.  பாந்தியிருத்தல்-பதுங்கியிருத்தல். துரிஞ்சில்-
வௌவால் இனத்தைச் சேர்ந்தது, உலாவு-உலாவித் திரிகின்ற.         (7)