காளியைச் சூழ்ந்த பேய் இருப்புக் கூறியது

144. துஞ்ச லுக்கணித் தாமென முன்னமே்
     சொன்ன சொன்னது றைதொறும் பேயெலாம்
அஞ்ச லித்தொரு கால்அக லாமலவ்
   வணங்கி னுக்கரு காகவி ருக்கவே.

     (பொ-நி.)  பேய்  எலாம், சொன்ன  துறைதொறும், அணங்கினுக்கு
அருகாக, அஞ்சலித்து, இருக்க; (எ-று.)

     (வி-ம்.) துஞ்சல்-(பசியால்)இறத்தல்,  அணித்து-நெருங்கியது. துறை-
இடம்.  அஞ்சலித்து -  வணங்கி.  ஒருகால் - ஒருகாலமும்.  அகலாமல்-
விட்டுச்செல்லாமல். அணங்கு-காளி.                            (11)