கால்முடப் பேயைக் கூறியது 145. | ஆளைச் சீறுக ளிற்றப யன்பொரூஉம் | | அக்க ளத்தில்அ ரசர்சி ரஞ்சொரி மூளைச் சேற்றில்வ ழுக்கிவி ழுந்திட மொழிபெ யர்ந்தொரு கான்முட மானவும். | (பொ-நி.) அபயன் பொரூஉம் களத்தில் அரசர் சிரம் சொரி மூளைச் சேற்றில் வழுக்கி விழுந்திட கால்முடமானவும்; (எ-று.) (வி-ம்.) ஆள்-ஆண்மை வீரர்கள். சீறு-சினந்து கொள்கின்ற களிறு- யானை. அபயன் - குலோத்துங்கன். பொரூஉம் - போர்செய்கின்ற. களம்- போர்க்களம் சொரி-சிந்துகின்ற. சிரம்-தலை. மொழி-கால் மூட்டு. (12) |
|
|