கைம்முடப் பேயைக் கூறியது 146. | அந்த நாளக்க ளத்தடு கூழினுக்கு | | ஆய்ந்த வெண்பல்ல ரிசியுரற்புக உந்து போதினிற் போதகக் கொம்பெனும் உலக்கை பட்டுவ லக்கைசொற் றானவும். |
(பொ-நி.) வெண்பல் அரிசி, உரல்புக, உந்து போதினில் போதகக் கொம்பெனும் உலக்கைபட்டு வலக்கை சொற்று ஆனவும்; (எ-று.)
(வி-ம்.) அந்தநாள்-குலோத்துங்கன் போர் புரிந்த நாள். அக்களம்- போர்க்களம். அடுதல் - சமைத்தல.் கூழ் - நிணக்கூழ். ஆய்ந்த- ஆராய்ந்தெடுத்த. வெண்பல் அரிசி-வெள்ளைநிறமுள்ள பற்களாகிய அரிசி. உந்துதல் - குற்றுதல். போதகக் கொம்பு-யானைத்தந்தம். சொற்று-சொற்றை. ஊனம்-முடம். (13) |