குருட்டுப் பேயைக் கூறியது

147. விருத ராசப யங்கரன் முன்னொர்நாள்
     வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங்
குருதி யுங்குட ருங்கலந்து அட்டவெங்
   கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும்.

     (பொ-நி.)     சக்கரக்கோட்டத்திடை,    கூழ்    தெறித்து   ஒரு
கண்குருடானவும்; (எ-று.)

     (வி-ம்.)   விருதராச   பயங்கரன்  -  குலோத்துங்கன்;   வெற்றிச்
சின்னங்களையுடைய       அரசர்களுக்கு       அச்சமுண்டாக்குவோன்.
சக்கரக்கோட்டம்-சக்கரக்கோட்டம்  என்னும் ஊர்.  குருதி-செந்நீர். அட்ட
-சமைத்த. வெம்கூழ்-சுடுகூழ். தெறித்தல்-படுதல்.                    (14)