செவிட்டுப் பேயைக் கூறியது 149. | ஆனை சாயவ டுபரி ஒன்றுகைத்து | | ஐம்ப டைப்பரு வத்துஅப யன்பொருஞ் சேனை வீரர்நின் றார்த்திடும் ஆர்ப்பினில் திமிரி வெங்களத் திற்செவி டானவும். |
(பொ-நி.) அபயன், பரி உகைத்து பொரும் திமிரி வெங்களத்தில ்வீரர் ஆர்த்திடும் ஆர்ப்பினில் செவிடானவும்; (எ-று.)
(வி-ம்.)ஆனை-யானை, அடு-கொல்லுகின்ற, பரி-குதிரை, உகைத்து-செலுத்தி; ஓட்டி. ஐம்படைப்பருவம் - ஐம்படைத்தாலி அணியும் இளமைப்பருவம், ஐம்படை: வில், வாள், தண்டு, வளை, ஆழி என்பன. இவைகளின் உருவைப் பொன்னாற் செய்து இளஞ்சிறார்களுக்குக் கழுத்திலணிவது பண்டையோர் மரபு. அபயன்-குலோத்துங்கன். ஆர்ப்பு- பேரொலி. (16) |