குறட் பேயைக் கூறியது

150.பண்டு தென்னவர் சாயஅ தற்குமுன்
     பணிசெய் பூதக ணங்கள னைத்தையுங்
கொண்டு வந்தபேய் கூடிய போதில்அக்
    குமரி மாதர்பெ றக்குற ளானவும்.

    (பொ-நி.)   தென்னவர்    சாய,    அதற்குமுன்,   பூதகணங்கள்
அனைத்தையும் பேய் கூடிய போதில், அம்மாதர் பெறக், குறள் ஆனவும்;
(எ-று.)

    (வி-ம்.)  தென்னவர்  - பாண்டியர்.  சாய - கெட.  அதற்குமுன் -
சாய்வதற்குமுன்.  பணி   செய்தல்  தென்னவர்க்  கென்க.  பூதகணங்கள்-
பூதக்கூட்டம்.  கூடிய போதில் -அக் குறட்பூதங்களோடு பேய்கள் புணர்ந்த
போதில்.  குமரி  மாதர் - இளையகுறட்  பெண்  பூதங்கள், குறள்-குறுகிய
வடிவம்.                                                   (17)