கூன் பேயைக் கூறியது

151. பரக்கு போதக்க டாரம ழித்தநாள்
     பாய்ந்த செம்புன லாடியும் நீந்தியும்
குரக்கு வாதம்பி டித்தவி தத்தினில்
   குடிய டங்கலுங் கூன்முது கானவும்.

     (பொ-நி.) கடாரம்   அழித்தநாள்,  செம்புனல்  ஆடியும்  நீந்தியும்,
குரங்கு வாதம் பிடித்த விதத்தினில் கூன்முதுகு ஆனவும்; (எ-று.)

  
  (வி-ம்.) ஓதம்- கடற்சார்பு. கடாரம் - பர்மா நாட்டின் கடற்கரையை
அடுத்த  ஓரூர்.   செம்புனல்  - குருதி.  ஆடுதல்  -நீந்தி விளையாடுதல்.
குரங்குவாதம் - குரங்குபோற்  கூனல்  உண்டாக்கும்  ஒரு  வகை நோய்.
விதத்தினில்-விதத்தால். குடி அடங்கலும்-சில பேய்க்கூட்டம் முழுதும். (18)