நெடும்பேய் செய்தி கூறியது

156.அடல்நாக வெலும்பெடுத்து நரம்பிற் கட்டி
     அடித்தடியும் பிடித்துஅமரின் மடிந்த வீரர்
குடர்சூடி நிணச்சட்டை யிட்டு நின்ற்
   கோயில்நா யகிநெடும்பேய் கும்பிட்டு ஆங்கே.

     (பொ-நி.)   தடிபிடித்துக்,  குடர்சூடி,   நிணச்சட்டை  இட்டு  நின்ற
நெடும்பேய் கும்பிட்டு; (எ-று.)

     (வி-ம்.) நாகம் - யானை.  நரம்பு - யானையின்  நரம்பு. அடித்தடி-தலையடிமைத்   தொழிலுக்கடையாளமான   தடி.  அமர்  - போர்,  சூடி-
மாலையாகச் சூடி, நிணம்-கொழுப்பு. நாயகி-காளி. நெடும்பேய் -தலைமைப் பேய்.                                                     (4)