நெடும்பேய் காளிக்குக் கூறல்

157. சுரகுருவின் தூதாகி யமன்பாற் செல்வோன்
     துணித்துவைத்த சிரம்அன்று தின்றபேயைச்
சிரம்அரிய வதற்குறவாய் ஒளித்துப் போந்த்
   சிலபேயைத் திருவுள்ளத் தறிதி யன்றே.

     (பொ-நி.)   சிரம்  தின்ற  பேயை,  சிரம்அரிய,  அதற்கு  உறவாய்
ஒளித்துப் போந்த பேயை அறிதி அன்றே; (எ-று.)

     (வி-ம்.)  சுரகுரு -சோழன் ஒருவன். செல்வோன்-சென்ற பேய்மகன்.
துணித்தல் - வெட்டுதல்  (உண்ணுதற்குத் துணித்த தென்க.) சிரம் - தலை.
அன்று-அந்தநாள். தின்ற-களவாடித்தின்ற. அரிய-நீ அரிந்துவிட. உறவாய்-
தொடர்புற்று நண்புரிமை பூண்ட.                               (5)