ஒரு முதுபேயின் வருகை கூறியது 158. | அப்பேயி னொருமுதுபேய் வந்து நின்றிங்கு | | அடியேனை விண்ணப்பஞ் செய்க என்றது இப்பேய்இங் கொருதீங்குஞ் செய்த தில்லை என்கொலோ திருவுள்ளம் என்னக் கேட்டே. |
(பொ-நி.) முதுபேய் வந்துநின்று, "விண்ணப்பம் செய்க" என்றது. "இப் பேய் தீங்கு செய்ததில்லை திருவுள்ளம் என்?" என்னக் கேட்டு; (எ-று.)
(வி-ம்.) முதுபேய் - கிழப்பேய். விண்ணப்பம் செய்தல்-தெரிவித்தல். தன் வருகையைத் தெரிவித்துத் தன்பாற் பிழை இன்மையைத் தெரிவிக்குமாறு முதுபேய் கூறிய தென்க. திருஉள்ளம்-சிறந்த கருத்து. (6) |