ஒரு முதுபேயின் வருகை கூறியது

158. அப்பேயி னொருமுதுபேய் வந்து நின்றிங்கு
     அடியேனை விண்ணப்பஞ் செய்க என்றது 
இப்பேய்இங் கொருதீங்குஞ் செய்த தில்லை
   என்கொலோ திருவுள்ளம் என்னக் கேட்டே.

     (பொ-நி.) முதுபேய்  வந்துநின்று,  "விண்ணப்பம் செய்க"  என்றது.
"இப் பேய் தீங்கு செய்ததில்லை திருவுள்ளம் என்?" என்னக் கேட்டு;
(எ-று.)

     (வி-ம்.) முதுபேய் - கிழப்பேய். விண்ணப்பம் செய்தல்-தெரிவித்தல்.
தன்   வருகையைத்   தெரிவித்துத்   தன்பாற்   பிழை    இன்மையைத்
தெரிவிக்குமாறு முதுபேய் கூறிய தென்க. திருஉள்ளம்-சிறந்த கருத்து.  (6)