முதுபேய் காளி திருமுன் அணுகியது கூறியது 159. | அழைக்க வென்றலும் அழைக்க வந்தணுகி | | அஞ்சி யஞ்சிஉன தாணையின் பிழைக்க வந்தனம்பொ றுத்தெ மக்கருள்செய் பெண்ண ணங்கெனவ ணங்கவே. |
(பொ-நி) "அழைக்க" என்றலும், அழைக்க (முதுபேய்)வந்து அணுகி அஞ்சி "பிழைக்க வந்தனம்; அருள்செய்" என வணங்க; (எ-று.)
(வி-ம்.) என்றலும்-காளி என்றலும் அழைக்க -நெடும்பேய் அழைக்க. ஆணையில் அடங்கிப் பிழைக்க வந்தனம் என்க. அணங்கு-தெய்வம். (7) |