உமை வணக்கம்

15. செய்யதிரு மேனியொரு பாதிகரி தாகத்
     தெய்வமுதல் நாயகனை எய்தசிலை மாரன்
கையின்மலர் பாதமலர் மீதும்அணு காநம்
   
கன்னிதன் மலர்க்கழல்கள்சென்னிமிசை வைப்பாம்.
    
16.கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேறக்
     கார்முகம்வ ளைத்துஉதியர் கோமகன்முடிக்கண்
பொறுத்தமலர் பாதமலர் மீதணிய நல்கும்
   பூழியர்பி ரான்அபயன் வாழ்கஇனி தென்றே.

  
 (பொ-நி.) செழியன்  வரை  ஏற வளைத்து, உதியர் கோமகன் மலர்
பாதமலர்  மீதணிய  நல்கும்  அபயன்  வாழ்க  என்று,  கரிதாக  எய்த
சிலைமாரன் மலர் அணுகா கன்னிதன் கழல்கள் சென்னி மிசை வைப்பாம்;
(எ-று.)

   
(வி-ம்.) செய்ய-சிவந்த.  கரிதாக  எய்த  மாரன்  என்க. தெய்வமுதல்
நாயகன்-சிவன். மாரன் - மன்மதன்.  மாரன்கை;   ஆறன்தொகை.  கன்னி
-உமை. கறுத்த-சினந்து பகைத்த. செழியன்-பாண்டியன். கழல்-பாதம். வரை-
மலை. கார்முகம் - வில். உதியர் - சேரர்.பொறுத்த-சூடிய. நல்கும் - அருள்
செய்யும்.  பூழியர் - பூழி  நாட்டார். அபயன் - குலோத்துங்கன். 
அபயன் சேரபாண்டியர்களை அடிமைப்படுத்தியமை  குறிக்கப்பட்டது. (15, 16)