முதுபேய்க்குக் காளி மொழிந்தது கூறியது 160. | அருத்தி யிற்பிழைநி னைத்த கூளியை | | அறுத்த வன்தலைய வன்பெறப் பொருத்தி அப்பிழைபொ றுத்த னம்பிழை பொறாத தில்லையினி யென்னவே. |
(பொ-நி.) "கூளியை அறுத்த தலையை அவன் பெறப்பொருத்தி, அப் பிழை பொறுத்தனம். இனிப் பொறாத பிழை இல்லை" என்ன; (எ-று.)
(வி-ம்.) அருத்தி -(தலையின் மேல் வைத்து) ஆசை, பிழை- குற்றம், களவாடல். கூளி - பேய். வன் - வலிய. தலை - போயினதுதலை. அவன்- தூதுசென்றவன். பொருத்தி-அமைத்து. (8) |