முதுபேய் மொழிந்தது கூறியது

161. உய்ந்து போயினம்உ வந்தெ மக்கருள
     ஒன்றோ டொப்பனவொ ராயிரம் 
இந்திர சாலமுள கற்று வந்தனென்
   இருந்து காணெனஇ றைஞ்சியே.

     (பொ-நி.)  "நீ   அருள,  உய்ந்து  போயினம்;   ஆயிரம்  இந்திர
சாலம்உள; கற்றுவந்தனன் காண்" என இறைஞ்சி; (எ-று.)

     (வி-ம்.) உய்தல் -பிழைத்தல்.  உவந்து-மகிழ்ந்து. ஒன்றோடொப்பன-
ஒன்றேபோல.  இந்திரசாலம்-மாயவித்தை.  இதனை உலக வழக்கில்  'கண்
கட்டி வித்தை' என வழங்குவர். இறைஞ்சி-வணங்கி.                (9)