துதிக்கை, யானைத் தலைகளான இந்திரசாலம் கூறியது

162. ஏற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய்
     இக்கை யிற்சிலது திக்கைபார் 
மாறி யிக்கையில்அ மைக்க மற்றவை
   மதக்க ரித்தலைகள் ஆனபார்.

     (பொ-நி.)   "திருக்கண்வைத்து  அருள்செய்;  இக்கையில்  துதிக்கை
அழைக்க, இக்கையில் மதக்கரித் தலைகள் ஆன" பார்; (எ-று.)

     (வி-ம்.) ஏற - நேரே,  திரு இருகண் - அழகிய  இரண்டு கண்கள்.
துதிக்கை-தும்பிக்கை. அழைக்க-கூப்பிட்டவுடன். மதக்கரி-மதயானை.  (10)