குருதி வெள்ளம் காட்டிய இந்திரசாலம் கூறியது 166. | அற்ற தோளிவைஅ லைப்ப பார்! உவை | | யறாத நீள்குடர்மி தப்பபார் இற்ற தாள்நரியி ழுப்பபார்! அடி யிழுக்கு மூளையில்வ ழுக்கல்பார்! |
(பொ-நி.) தோள் அலைப்ப பார்; குடர் மிதப்ப பார்; தாள் நரி இழுப்ப பார்; மூளையில் அடி வழுக்கல் பார்; (எ-று.) (வி-ம்.) அற்ற - விடுபட்ட. அலைப்ப- குருதிவெள்ளம் அலைத்துச் செல்லலை. இற்ற - உடலினின்றும் இற்று விழுந்த. தாள் - கால்கள். அடி- பாதம். இழுக்கும்-வழுக்கும். வழுக்கல்-கால்கள் வழுக்குதல். (14) |