அன்னையர் எழுவர் வணக்கம்

17. மேதி புள்ளலகை தோகை யேறுவணம்
     வேழம் என்றகொடி ஏழுடைச்
சோதி மென்கொடிகள் ஏழின் ஏழிருது
   ணைப்ப தந்தொழநி னைத்துமே.
    
18. கேழல் மேழிகலை யாளி வீணைசிலை
     கெண்டை என்றினைய பல்கொடி
தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த
   னிப்பு லிக்கொடித ழைக்கவே.

    
(பொ-நி) பல்கொடி  தாழ,  உயர்ந்த  புலிக்கொடி தழைக்க, கொடி
ஏழுடை,  கொடிகள்  ஏழின்,  ஏழிரு  துணைப்பதம்  தொழ நினைத்தும்;
(எ-று)

    
(வி-ம்.) ஏழு(சத்த)மாதர்களில்      சாமுண்டிக்கு     எருமையும்,
அபிராமிக்கு  அன்னமும்,  வராகிக்கு அலகையும், கௌமாரிக்கு மயிலும்,
மயேசுவரிக்கு   எருதும்,   நாராயணிக்குக்   கருடனும்,  இந்திராணிக்கு
யானையுங்கொடிகளாம்.  மேதி-எருமை.   புள்-அன்னம்.  அலகை-பேய்.
தோகை-மயில். ஏறு-எருது. உவணம்-கருடன்: வேழம்-யானை.  கொடிகள
்ஏழின்  -  கொடி   போன்ற  அன்னையர்  எழுவர்.  கேழல் - பன்றி.
மேழி - கலப்பை. கலை-மான். யாளி-சிங்கம். சிலை-வில். கெண்டை-மீன்,
தாழ - தாழ்வடைய, பணிய. மேருவில்-இமயமலையில். செம்பியர்-சோழர்.
கேழல்   முதலியன   பிற   அரசர்   கொடிகள்   பல   அரசரையும்
அடிப்படுத்தியமை குறிக்கப்பட்டது.                         (17. 18)