முதுபேய் காளியிடம் மொழிந்தது கூறியது

174. கொற்றவர்கோன் வாளபயன் அறிய வாழுங்
     குவலயத்தோர் கலையனைத்துங் கூற ஆங்கே
கற்றுவந்தார் கற்ற அவன் காணு மாபோல்
    கடைபோகக் கண்டருள்என் கல்வி யென்றே.

     (பொ-நி.) "குவலயத்தோர்   கூற,   கற்றுவந்தார்   கற்ற   அவன்
காணுமாபோல் என் கல்வி கண்டருள்"  என்று. (எ-று.)

     (வி-ம்.) கொற்றவர்கோன்- அரசர்க்கரசன். அபயன்-குலோத்துங்கன்.
வாழும்-புகழொடு வாழும். குவலயம்-உலகம்.  கலை-பல  அறிவுத்துறைகள்,
கற்ற-தாம்    கற்றவைகளை,    அவன் - குலோத்துங்கன்.   காணும் ஆ
-கண்டறிகின்றவாறு.  கடைபோக-முடிய.                         (22)