முதுபேய் வரலாறு கூறியது 176. | நின்முனிவும் சுரகுருவின் முனிவும்அஞ்சி | | நிலையரிதென்று இமகிரிபுக் கிருந்தேற்கு ஒளவை தன்முனிவு மவன்முனிவுந் தவிர்க என்று சாதனமந் திரவிச்சை பலவுந் தந்தே. |
(பொ-நி.) (முனிவும்) (முனிவும்) அஞ்சி இமகிரி புக்கு இருந்தேற்கு (முனிவும்) (முனிவும்) தவிர்க என்று விச்சை பலவும் தந்து; (எ-று.) (வி-ம்.) முனிவு - வெகுளி. சுரகுரு - சோழன். நிலை-இவ்விடத்து நிலைபெற்றிருத்தல். ஒளவை - தாயாகிய காளி. அவன்; சுரகுரு. சாதனம்- கருவியாகிய வித்தை. (24) |