கரிகாலன் இமயத்தில் புலிக்குறி பொறித்தது கூறியது 178. | செண்டு கொண்டுகரி காலனொரு காலின் இமயச் | | சிமய மால்வரைதி ரித்தருளிமீள அதனைப் பண்டு நின்றபடி நிற்கஇது வென்று முதுகில் பாய்பு லிக்குறிபொறித்து அதும றித்தபொழுதே. |
(பொ-நி.) கரிகாலன், வரைதிரித்தருளி, நிற்க இது என்று புலிக்குறி பொறித்து, அது மறித்தபொழுது; (எ-று.) (வி-ம்.) செண்டு; ஒரு போர்க்கருவி. ஒருகால் -ஒருசமயம், சிமயம்- குவடு. திரித்து - கீழும் மேலுமாகத் திருப்பி, திரித்தல்-நிலை பெறுதல். முதுகில்-நடுவிடத்தில். பொறித்து-எழுதி. அது: இமயம். மறித்த -முன்போல் நிலைநிறுத்திய. (1) |