நாரதர், கரிகாலனை அணுகி மொழிந்தது கூறியது | 179. | கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனும் | | | கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின் போலு மன்னருள ரல்லர் என வாசி புகலாப் புகல்வ தொன்றுளது கேளரச என்று புகல்வான | (பொ-நி.)வேதமுனி வந்து ஆசி புகலா ‘அரச, புகல்வது; உளது கேள்' என்று புகல்வான்; (எ-று.) (வி-ம்.) காலம் மும்மை - இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூன்று காலமும். ஆசி-வாழ்த்துரை; நல்லுரை. புகலா-புகன்று. (2) |