இதுவும் அது

180. பண்டு பாரதமெ னுங்கதைப ராச ரன்மகன்
       கர வெங்கரிமு கன்பரும ருப்பை யொருகைக்
கொண்டு மேருசிக ரத்தொருபு றத்தி லெழுதிக்
      குவல யம்பெறுத வப்பயனு ரைப்ப வரிதால்.
 
 
     (பொ-நி.)பராசரன் மகன் கதை பகர, கரிமுகன், மருப்பைக்கொண்டு,
மேரு சிகரத்து எழுதிக், குவலயம் பெறுதவப்பயன் அரிது; (எ-று.)

     (வி-ம்.) பராசரன்மகன்;  வியாதன். கரிமுகன்-ஆனை முகக் கடவுள்.
பருமருப்பு  -  பெரிய கொம்பு.  சிகரம்-உச்சி எழுதி; எழுத எனத் திரிக்க.
குவலயம்-உலகத்தார்.                                         (3)