திருமாலே அபயனாவனென்பது கூறியது

184. கமல யோனிமுத லாகவருமுங்கண் மரபிற்
      காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால்
அமல வேதமிது காணும்இதி லார ணநிலத்து
     அமல னேயபய னாகஅறி கென்ற ருளியே.
 

     (பொ-நி.)  உங்கள்  மரபில், மன்னவர்கள்,  கமலயோனி முதலாக
வருகின்ற முறையால்,  இது வேதம்,அமலனே அபயனாக அறிக என்றருளி;
(எ-று.)

     (வி-ம்.) கமலயோனி -பிரமன். அமலன்-திருமால்.            (7)