| திருமால், நான்முகன், மரீசி, காசிபன், ஞாயிறு வழிமுறை கூறியது | 186. | ஆதி மால்அமல நாபிகம லத்து அயனுதித்து | | | அயன்ம ரீசியெனு மண்ணலைய ளித்த பரிசும் காதல் கூர்தரும ரீசிமக னாகி வளரும் காசி பன்கதிர் அருக்கனைய ளித்த பரிசும் |
(பொ-நி.) திருமாலின் உந்திக் கமலத்தில் நான்முகன் தோன்றினான், நான்முகன் மரீசியைப் பெற்றான். மரீசி காசிபனைப் பெற்றான். காசிபன் கதிரவனை(சூரியனை)ப் பெற்றான். (எ-று.) (வி-ம்.) மால்-திருமால். நாபி-உந்தி (கொப்பூழ்.) அயன்-நான்முகன். அருக்கன்-கதிரவன். (9) |