மனு, இக்குவாகு சிறப்புக் கூறியது

187.அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதி னிபுரந்து
      அரிய காதலனை ஆவினது கன்று நிகரென்று
எவ்வ ருக்கமும்வி யப்பமுறை செய்த பரிசும்,
     இக்கு வாகுஇவன் மைந்தனென வந்த பரிசும்.
 

     (பொ-நி.) மனு  அருக்கன்  மகனாகிப்  புரந்து முறைசெய்தகதையும், இக்குவாகு இவன் மைந்தன் என வந்த பரிசும்; (எ-று.)

     (வி-ம்.) அருக்கன் - ஞாயிறு.  மனு -மனுச்சோழன். மேதினி-உலகம்.
காதலன்-புதல்வன். வருக்கம்-மக்கட்கூட்டம். பரிசு-தன்மை.           (10)