ககுத்தன் சிறப்புக் கூறியது

188.இக்கு வாகுவின்ம கன்புதல்வ னான உரவோன்
       இகலு வோன் இகலு ரஞ்செய்துபு ரந்த ரனெனும்
சக்கு வாயிரமு டைக்களிறு வாகனமெனத்
      தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும்.
 

     (பொ-நி.) உரவோன், களிறு வாகனம் என இருந்து பொருதானவரை
வென்ற சயமும்: (எ-று.)

     (வி-ம்.) மகன் புதல்வன்-பேரன். உரம்-வலிமை. உரவோன்-ககுத்தன்.
இகல்-பகை. புரந்தரன்-இந்திரன். ஆயிரம் சக்கு -ஆயிரம் கண்.  தானவர்-
அசுரர்.                                                    (11)