மாந்தாதா, முசுகுந்தன் சிறப்புக் கூறியது 189. | ஒருது றைப்புனல்சி னப்புலியும் மானுமுடனே | | உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும் பொருது றைத்தலைபு குந்துமுசு குந்தன் இமையோர் புரம டங்கலும ரண்செய்துபு ரந்த புகழும். | (பொ-நி.) புலியும் மானும் புனல் உண்ணவைத்த உரவோன் வைத்த அருளும் ; முசுகுந்தன்; புகுந்து, புரந்த புகழும்; (எ-று.) (வி-ம்.) புனல் - நீர். உரவோன் - மாந்தாதா. பொருதுறைத்தலை- போர்க்களம். இமையோர்புரம்- தேவலோகம். அடங்கலும் -முழுதும். அரண்- காவல். புரத்தல்-பாதுகாத்தல். (12) |