வாழ்த்து

19.விதிமறை யவர்தொழில் விளைகவே
     விளைதலின் முகில்மழை பொழிகவே
நிதிதரு பயிர்வளம் நிறைகவே
   நிறைதலின் உயிர்நிலை பெறுகவே.
  
20. தலமுதல் உளமனு வளர்கவே
     சயதரன் உயர்புலி வளர்கவே 
நிலவுமிழ் கவிகையும் வளர்கவே
   நிதிபொழி கவிகையும் வளர்கவே.

    
     (பொ-நி.) மனுவளர்க; புலி வளர்க;  கவிகையும் வளர்க; (அதனால்)
மறையவர்  தொழில்  விளைக;  மழை பொழிக;   வளம்  நிறைக;  உயிர
்நிலைபெறுக (எ-று)


     (வி-ம்.) மறையவர்  தொழில் - வேள்வி. முகில் - மேகம். நிதிதரு -
செல்வத்தைத்  தரும்.  நிலைபெறுக - நிலைபெற்று  வாழ்க.  தலம் முதல்
உள - உலக  நிலைபேற்றிற்குக்  காரணமாக உள்ள. மனு-குலோத்துங்கன்.
சயதரன் - குலோத்துங்கன், புலி-புலிக்கொடி. நிலவு-நிலாவொளி.  கவிகை-
வெண்கொற்றக்குடை. நிதி-செல்வம். கவிகை-கீழ்நோக்கி  இடக் கவிந்தகை.
                                                      (19, 20)