பிருதுலாட்சன், சிபிச் சிறப்புக் கூறியது 190. | கடல்க லக்கவெழு மின்னமுது தன்னை யொருவன் | | கடவுள் வானவர்க ளுண்ண அருள் செய்தகதையும் உடல்க லக்கறஅ ரிந்துதசை யிட்டும் ஒருவன் ஒருது லைப்புறவொடு ஒக்கநிறை புக்க புகழும். | (பொ-நி.) ஒருவன், இன்னமுது தன்னை, வானவர்கள் உண்ண அருள்செய்த கதையும், ஒருவன் தசையிட்டு, நிறைபுக்க புகழும; (எ-று.) (வி-ம்.) கலக்க-கடைய. வானவர்- தேவர். கலக்கு அற -மனக்கலக்கம் அற. அரிந்து-அறுத்து. தசையிட்டு-புலாலைவைத்து, துலை-துலாத்தட்டு,புறவு- புறா. நிறை-எடையாக. (13) |