சுராதிராசன், இராசகேசரி, பரகேசரி சிறப்புக் கூறியது

191. சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள்
   சோழ மண்டல மமைத்தபிற கேழுலகையும்
இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம்
  இருவ ராணைபுலி யாணையென நின்ற புகழும்.

     (பொ-நி.) வருசோழன்  சுராதிராசன்  சோழமண்டலம் அமைத்தபிறகு,
இருவர், புரந்து, ஆணை, புலி ஆணை என நின்ற புகழும்; (எ-று.)

     (வி-ம்.)  சுராதிராசன் - சுராதிராசனென்பவன்.  ஆணை - கட்டளை .
முதலாகஅமைத்து   என   இயைக்க.   இருவர்   புரந்து   என   இயைக்க.
(அவர்கள்)ஆணை  புலி  ஆணை  எனவே,  புலிப்பொறி  கொள்ளப்பட்டது
குறித்தவாறாம்.                                                 (14)