சித்திரன், சமுத்திரசித்து பஞ்சபன் முதலியோர் சிறப்புக் கூறியது   

193. புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த வவனும்
   புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்டவவனும்
வலியி னிற்குருதி உண்கெனவ ளித்த வவனும்
  வாத ராசனைவ லிந்துபணி கொண்ட வவனும்

     (பொ-நி.) இந்திரனை வைத்த அவனும், புகவிட்ட அவனும், அளித்த
அவனும், பணிகொண்ட அவனும்; (எ-று.)

     (வி-ம்.) கொடியில்-தன் கொடியிடத்தில். புணரி-கடல். குருதி -செந்நீர்.
வாதராசன்-வாயுதேவன்; காற்றுக் கடவுள்.                           (16)