தூங்கெயில் எறிந்தோன், உபரிசரன் முதலியோர் சிறப்புக் கூறியது

194. தூங்கு மூன்றெயி லெறிந்தவவ னுந்தி ரண்மணிச்
   சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த வவனும்
தாங்கள் பாரதமு டிப்பளவுநின்று தருமன்
  தன்க டற்படைத னக்குதவி செய்த வவனும்.

     (பொ-நி.) தூங்கெயில் எறிந்த அவனும்,விமானமது உயர்த்த அவனும்,
உதவிசெய்த அவனும். (எ-று.)

     (வி-ம்.) தூங்கு - அசைந்து  செல்கின்ற.  திரள் மணி - கூட்டமாகிய
ஒளிமணிக்கற்கள். சுடர் விமானம்-ஒளியுள்ள விமானம். வான்-வானம்.எயில் -
மதில். எறிதல்-அழித்தல்.                                       (17)