கிள்ளிவளவன், செங்கணான் சிறப்புக் கூறியது 195. | தளவ ழிக்குநகை வேல்விழிபி லத்தின் வழியே | | தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட வவனும் களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன் கால்வ ழித்தளையை வெட்டியர சிட்ட வவனும். | (பொ-நி.) உரகர்தம் கண்மணி கொண்ட அவனும்; உதியன் கால்வழித்தளையை வெட்டி அரசிட்ட அவனும்; (எ-று.) (வி-ம்.) தளவு - முல்லை. நகை - முறுவல். பிலம் -குகை உரகர்தம் கண்மணி-நாககன்னிகை. களவழி-களவழி நாற்பது என்னும் நூல். பொய்கை- பொய்கையாரென்னும் புலவர். உதியன்-சேரமான் கணைக்கால் இரும்பொறை, தளை-விலங்கு. இட்ட-வைத்த. அவன்: செங்கணான். (18) |