கரிகாலன், சேர பாண்டியரை மானக்கேடு செய்தது கூறியது 199. | ஒருவர் முன்னோர்நாள் தந்து பின்செலா | | உதியர் மன்னரே மதுரை மன்னரென்று இருவர் தம்மையும் கிழிகள் சுற்று வித்து எரிவி விளக்குவைத்து இகல்வி ளைத்ததும். |
(பொ-நி.) ஒருவர் முன்பின் தந்து செலா இருவர் தம்மையும்,கிழி சுற்றுவித்து, விளக்குவைத்து இகல் விளைத்ததும்: (எ-று.) (வி-ம்.) ஒருவர்: பகைவர். ஓர்நாள்- ஒருநாளும். பின் தந்து செலா- புறக்கொடை கொடாத. உதியர்: சேரர். கிழி-தந்தை. எரி விளக்கு- எரிகின்ற விளக்கு. வைத்து - தலையில் வைத்து. இகல் - வலிமை. விளைத்தது- தோற்றுவித்தது. (22) |