சிவ வணக்கம் 1. | புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன் | | தொழில்காட்டப் புவனவாழ்க்கைச் செயல்வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப் புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம் | 2. | அருமறையின் நெறிகாட்ட அயன்பயந்த | | நிலமகளை அண்டங் காக்கும் உரிமையினிற் கைப்பிடித்த உபயகுலோத் தமனபயன் வாழ்க வென்றே. | (பொருள் நிலை.) அருமறையின் நெறி காட்ட, நிலமகளை உரிமையினிற் கைப்பிடித்த அபயன் வாழ்க என்று, புவன வாழ்க்கைச் செயல் வண்ணம் நிலைநிறுத்த, மலைமகளைப் புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்;(என்றவாறு). (விளக்கம்.) புனல்வார்க்க, தொழில்காட்ட, புணர்ந்தவன் என முடிக்க, புயல்வண்ணன்; திருமால், நீருண்ட கரிய முகில் போன்ற நிறத்தினராகையால திருமால் புயல்வண்ணன் என்னப்பட்டார். புனல்-நீர், பூமிசையோன்: பிரமன். தொழில்: திருமணச் சடங்கு. புவனம் - உலகம். வாழ்க்கை - இல்லற வாழ்க்கை. வண்ணம் - தன்மை. மலைமகளைப் புணர்ந்தவன்: சிவன்: மறை நெறி-வேதநெறி, ஒழுக்க நெறி. அயன் - பிரமன். அண்டங்காக்கும் உரிமை - உலகைக் காக்கும் உரிமை. உபய குலோத்தமன் - தாய் தந்தையர் குலத்துக்கு மேன்மையை உண்டாக்கிய முதற் குலோத்துங்க சோழன். தாய் வழி உரிமையில் சோழ அரசை அடைந்தானாதலின், தந்தை குலத்தையே அன்றித் தாயின் குலத்தையும் விளங்கச் செய்தான். குலோத்துங்கன் உலகில் நல்லொழுக்கத்தை நிலைநிறுத்தியது குறிக்கப்பட்டது. (1, 2) |