இராசேந்திர சோழன் சிறப்புக் கூறியது 202. | களிறு கங்கைநீ ருண்ண மண்ணையில் | | காய்சி னத்தொடே கலவு செம்பியன் குளிறு தெண்டிரைக் குரைக டாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும், | (பொ-நி.) செம்பியன் மண்ணையில் களிறு உண்ண, கடாரமும் கொண்டு குடையுள் மண்டலம் வைத்ததும்; (எ-று.) (வி-ம்.) மண்ணை; ஓர் ஊர். கலவு - பொருந்திய. செம்பியன் - இராசேந்திரசோழன். குளிறு-ஒலிக்கின்ற.திரை- அலைகளையுடைய. குரை கடாரம் - பல்வகை ஒலிகளையுடைய கடாரம்.அலை- ஒலி செய்கின்ற. மண்டலம் - உலகம். குடையுள்வைத்தல்- தன் வெண்கொற்றக் குடையின் கீழ் அடக்கியதும். (25) |