இராசாதிராசன் சிறப்புக் கூறியது     

203.கம்பி லிச்சயத் தம்ப நட்டதும்
   கடிய ரண்கொள்கல் யாணர் கட்டறக்
கிம்பு ரிப்பணைக் கிரியு கைத்தவன்
  கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும்

     (பொ-நி.) கிரி உகைத்தவன், சயத்தம்பம் நட்டதும்,கல்யாணர் கட்டற;
புலி பொறித்ததும்; (எ-று.)

     (வி-ம்.) கம்பிலி; ஒரு நகரம். சயத்தம்பம்-வெற்றித்தூண். கடி அரண் -
காவலையுடைய மதில்கள். கல்யாணர்-சளுக்கியர். கட்டற-நிலைகுலைய. கிம்புரி-
யானைத் தந்தத்தில் அணியும் பூண். பணை-யானை கட்டுமிடம். கிரி - யானை.
(26)