இராசேந்திரதேவன் சிறப்புக் கூறியது     

204.ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத்து
   உலகு யக்கொளப் பொருது கொப்பையிற்
பொருக ளத்திலே முடிக வித்தவன்
  புவிக விப்பதோர் குடைக வித்ததும்.

     (பொ-நி.) களிற்றை  ஒத்து,  கொப்பையிற்  பொருது,  முடிகவித்தவன்
குடைகவித்ததும்; (எ-று.)

     (வி-ம்.) வருகளிறு-(ஏறி) வருகின்ற யானை. உயக்கொள-பிழைத்தலைப்
பெறுமாறு. கொப்பை; ஓர் ஊர். பொருது-போர்செய்து. புவி- உலகம். கவித்தது
தன் முடிமீதென்க.                                             (27)