இராசமகேந்திரன் சிறப்புக் கூறியது 205. | பனுவலுக்கு முதலாய வேத நான்கில் | | பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கண் மனுவி னுக்கு மும்மடி நான் மடியாஞ் சோழன் மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும், | (பொ-நி.) நெறி புதுக்கி, நான்மடி ஆம் சோழன் குடைக்கீழ் அறம் வளர்ந்த ஆறும்; (எ-று.) (வி-ம்.) பனுவல்-நூல். முதல் ஆய-முதன்மையான. பண்டு-முன்பு. புதுக்கி-புதுப்பித்து. மும்மடி-மூன்று மடங்கு. ஆம் -சிறந்தவன் ஆகிய; சோழனது குடை என்க. அறம் தளிர்ப்ப-அறம் தழைக்கும்படி. (28) |