முதற்குலோத்துங்கன் தோற்றம் கூறியது

206. குந்தளரைக் கூடற்சங் கமத்துவென்ற
   கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை
இந்தநிலக் குலப்பாவை இவன்பாற் சேர
  என்ன தவஞ் செய்திருந்தாள் என்னத் தோன்றி.

     (பொ-நி.) அபயன் அளித்த பின்னை பாவை சேர என்ன தவம் செய்திருந்தாள் என்னத் தோன்றி; (எ-று.)

     (வி-ம்.) குந்தளர்-குந்தளநாட்டு வீரர். கூடல் சங்கமம்-கூடற்
சங்கமமென்னும் இடம். கோன்-அரசன். குவலயம்-உலகம். குலம்-மேன்மை. தோன்றி-பிறந்து.                                           (29)